புஷ்பவனம் குப்புசாமி, அவரது மனைவி அனிதா அவர்களின் நாட்டுப்புறப் பாடல்கள். மிக நன்றாக இருந்தது. இது பற்றி விளக்கமாகப் பின்னர் எழுதுகிறேன். குறிப்பிட்டுச் சொல்வதென்றால் புஷ்பவனம் பாடிய 'காலம் மாறிப்போச்சு' என்னும் நகைச்சுவைப் பாடல். கலக்கி விட்டார் மனுஷன்.
சீனியர் அமைச்சர் பொன்னையன், மற்றும் அவைத்தலைவர் காளிமுத்து, மற்றும் பல பெயர், முகம் தெரியாத அமைச்சர்கள் வந்திருந்தனர்.
ஒன்பது பாடல்கள் பாடிய பின்னர், பத்தாவதாக ஒன்று ஆரம்பிக்க இடை மறித்த அமைச்சர் பெருமக்கள், நீண்ட நன்றியுரைக்குப் பின்னர் ஆளுக்கொரு பொன்னாடையை ஆளுக்கொன்றாகப் போர்த்தினர். மீண்டும் பத்தாவது பாடல் தொடங்க, மணியும் 21.30 ஆனது, உணவு பரிமாறல் தொடங்கியது. அனைவரும் பந்திக்குப் போனாலும் பாடல் தொடர்ந்தது. நேரம் நிறைய ஆனதாலும், மறுநாள் கருத்தரங்குக்குச் செல்ல வேண்டிய காரணத்தாலும் நான் கிளம்பி வர வேண்டியதயிற்று.